ஜனாதிபதி முன்னிலையில் காரசாரமான விவாதம்!
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி முன்னிலையில் காரசாரமான விவாதம்!

Share

காரசாரமான விவாதம்!

கடன் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண மானிய முறைமை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன் தினம் மாலை இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் சூடுபிடித்த சூழ்நிலையை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவிற்கும் இடையில் காரசாரமான உரையாடல் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மாலை நடந்த விசேட அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டமும் நடைபெற்றிருந்தது.

நிவாரண உதவித் தொகை முறையின் குறைபாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுட்டிக்காட்டிய போது அந்த குறைபாடுகளை சரி செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் கருத்திற்கு எதிராக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கருத்து தெரிவித்ததால் காரசாரமான விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலைமையை ஜனாதிபதி தலைவிட்டு தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...