ஜனாதிபதி முன்னிலையில் காரசாரமான விவாதம்!
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி முன்னிலையில் காரசாரமான விவாதம்!

Share

காரசாரமான விவாதம்!

கடன் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண மானிய முறைமை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று முன் தினம் மாலை இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் சூடுபிடித்த சூழ்நிலையை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவிற்கும் இடையில் காரசாரமான உரையாடல் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் மாலை நடந்த விசேட அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டமும் நடைபெற்றிருந்தது.

நிவாரண உதவித் தொகை முறையின் குறைபாடுகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுட்டிக்காட்டிய போது அந்த குறைபாடுகளை சரி செய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் கருத்திற்கு எதிராக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கருத்து தெரிவித்ததால் காரசாரமான விவாதம் எழுந்துள்ளது. இந்த நிலைமையை ஜனாதிபதி தலைவிட்டு தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 11 1
உலகம்செய்திகள்

ஆயிரக்கணக்கானோருக்குக் கனேடியக் குடியுரிமை: பெற்றோருக்கு வெளிநாட்டில் பிறந்த மற்றும் தத்தெடுத்த குழந்தைகளுக்குப் புதிய சட்டம்!

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்குக் குடியுரிமை வழங்குவதற்காக ஒரு புதிய சட்டத்தை கனடா தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச்...

25 6916c692d4a63
உலகம்செய்திகள்

விண்வெளி திட்டத்தில் ஈரான் முன்னேற்றம்: ஒரே ராக்கெட் மூலம் 3 உள்நாட்டுச் செயற்கைக்கோள்கள் அடுத்த 3 நாட்களில் விண்ணில் ஏவத் திட்டம்!

ஒரே நேரத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான்...