9
இலங்கைசெய்திகள்

இந்து சமுத்திர பொருளாதாரத்தில் இலங்கையை கட்டமைக்க ரணில் புதிய திட்டம்

Share

இந்து சமுத்திர பொருளாதாரத்தில் இலங்கையை கட்டமைக்க ரணில் புதிய திட்டம்

இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு பொருளாதார நாடக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இயலும் ஸ்ரீலங்கா தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, ”ஜனாதிபதி அவர்களே, உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘தேரவாத வர்த்தகப் பொருளாதாரம்’ என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய ஜனாதிபதி, ”கடந்த காலங்களில் இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த வலயத்தில் நமது நாடு வர்த்தக நாடாக இருந்தது.

சீனா உள்ளிட்ட பிராந்தியத்தில் இருந்து பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பரிமாறப்பட்டது. ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலையை அடிப்படையாக கொண்டு அந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

எங்கள் இந்தக் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தபோது, ​​அந்த வளர்ச்சி தாய்லாந்தில் ஏற்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அந்த ராஜ்ஜியங்கள் வீழ்ச்சியடைந்தன.

தாய்லாந்து பழைய வழியில் ஏற்றுமதி பொருளாதாரத்தை முன்னெடுத்தாலும் நாம் அந்த முறையை பின்பற்றவில்லை.

மேலும் தாய்லாந்து முறையைப் வியட்நாமும் பின்பற்றியது. தாய்லாந்தும் இலங்கையும் தேரவாத நாடுகளாக முக்கிய வர்த்தகப் பொருளாதாரங்களாக இருந்தன.

1990 இல் இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தி 08 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. வியட்நாமில் மொத்தத் தேசிய உற்பத்தி 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

நம் நாட்டில் கடந்த காலத்தில் தேரவாத பொருளாதாரம் இருந்தது. அந்தத் தேரவாதப் பொருளாதாரத்திற்குத் திரும்பிச் செல்லுமாறு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்” என்றார்.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...