இலங்கைசெய்திகள்

பொதுமக்களிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் முன்வைத்துள்ள கோரிக்கை

Share
8 5
Share

ஆளுங்கட்சியின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தது போதும், இனியாவது ஏனைய கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆளுங்கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாந்து போன பலருக்கும் தற்போது அரசியல் வெறுத்துப் போய்விட்டது.

அவர்கள் வாக்களிக்காமல் இருக்கத் தீர்மானித்துள்ளார்கள். ஆனால் ஆளுங்கட்சியின் வாக்குறுதிகளால் ஏமாந்தது போதும். இனியாவது ஏனைய கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன, காலி மாவட்ட ஐ.தே.க வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...