8 5
இலங்கைசெய்திகள்

பொதுமக்களிடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் முன்வைத்துள்ள கோரிக்கை

Share

ஆளுங்கட்சியின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்தது போதும், இனியாவது ஏனைய கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஆளுங்கட்சியின் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாந்து போன பலருக்கும் தற்போது அரசியல் வெறுத்துப் போய்விட்டது.

அவர்கள் வாக்களிக்காமல் இருக்கத் தீர்மானித்துள்ளார்கள். ஆனால் ஆளுங்கட்சியின் வாக்குறுதிகளால் ஏமாந்தது போதும். இனியாவது ஏனைய கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்று அவர்களிடம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன, காலி மாவட்ட ஐ.தே.க வேட்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...