16 5
இலங்கைசெய்திகள்

அப்பாவி மக்களை குறிவைக்கும் இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு

Share

அப்பாவி மக்களை குறிவைக்கும் இலங்கையின் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு

இலங்கையின் விரிவான உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு இயந்திரம் அப்பாவி மக்களை குறிவைப்பதற்காக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

விமர்சனங்களில் ஈடுபடுபவர்களை மௌனமாக்குவதற்காகவும் சிறுபான்மை சமூகங்களை இழிவுபடுத்துவதற்காகவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை பயன்படுத்துகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை முடிவிற்கு கொண்டுவருவதாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அதிகாரிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தினை தாங்கள் எதிராளிகள் என கருதுபவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்துகின்றனர்.

2022 இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு ஆற்றிய உரையில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்துவதாக உறுதிமொழி வழங்கினார்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றது

இலங்கை அதிகாரிகள் தாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளிற்கு உரிய ஆதாரங்களை முன்வைக்காத போதிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றனர்.

கண்மூடித்தனமாக தடுத்துவைத்தல் மற்றும் சித்திரவதைகள் காரணமாக சிலர் பலவருடகாலமாக பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை சிலர் வழக்குகள் கைவிடப்பட்ட பின்னரும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்கின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் பரந்துபட்ட அளவில் பயன்படுத்தப்படுவதால் சிவில்சமூகம் அரசாங்கமட்டத்திலான ஊழல் குறித்து ஆராய முடியாத நிலையில் காணப்படுவதாக 2023 செப்டம்பரில் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் பயங்கரவாத தடைச்சட்டத்தினால் ஏற்படும் அச்சநிலை அவ்வாறானது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு சகாக்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டும்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...