5 13
இலங்கைசெய்திகள்

அநுர அரசாங்கத்திற்கு பாடம் எடுக்க தயாராகும் ரணில்!

Share

அநுர அரசாங்கத்திற்கு பாடம் எடுக்க தயாராகும் ரணில்!

எதிர்ப்பாளர்கள் தம்மை அழைக்கும் பெயர்களை விமர்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), அரசாங்கத்தின் நிதியை எவ்வாறு கையாள்வது என்று தெரியாவிட்டால் அநுர அரசாங்கத்தை தாத்தாவிடம் வந்து கேட்டு தெரிந்து கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

காலியில் நேற்றையதினம் (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, “அரசாங்கத்தில் இருப்பவர்கள் அரசாங்க நிதியை கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அரச ஊழியர்களின் சம்பளத்தை இரண்டு கட்டங்களாக அதிகரிக்க உதய செனவிரத்ன குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைபடுத்த வேண்டும்.

செலுத்தும் வரிக்கான வரம்பை ரூ.150,000 ஆக உயர்த்தி பின்னர் அதை மேலும் ரூ.200,000 ஆக உயர்த்துவதற்கான ஒப்பந்தத்துடன் அது முன்னேற வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலின் மிக முக்கியமான அம்சம் பொருளாதாரம், நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு திட்டத்தை உருவாக்கினோம்.

தற்போது அதனை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது குறித்து ஜனாதிபதி தெரிவிக்க வேண்டும், அல்லது முற்றிலுமாக ஒழிக்கப்படுமா என்பதையும் அவரே சொல்ல வேண்டும்.” என்றார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...