rtjy 173 scaled
இலங்கைசெய்திகள்

மொட்டுடன் சங்கமித்து ஜனாதிபதி வேட்பாளராகவுள்ள ரணில்

Share

மொட்டுடன் சங்கமித்து ஜனாதிபதி வேட்பாளராகவுள்ள ரணில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

மூன்றெழுத்துடையவரே மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். இன்னும் ஒன்றரை மாதமளவில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்பினராகி ஜனாதிபதி வேட்பாளராக வரலாம்.

ஜனாதிபதி வேட்பாளரை முன்கூட்டியே முன்னிறுத்துவது எமது நோக்கமல்ல. ஜனாதிபதித் தேர்தல் வரும்போது நாட்டு மக்கள் எப்படிப்பட்ட வேட்பாளரை எதிர்பார்க்கின்றார்கள் என்பதைக் கணிக்க முடியாது.

அதற்கமைய, மக்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களைக் கருத்தில்கொண்டு வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

அந்த வேட்பாளர் நிச்சயமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்பினராக இருப்பார் என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...