rtjy 173 scaled
இலங்கைசெய்திகள்

மொட்டுடன் சங்கமித்து ஜனாதிபதி வேட்பாளராகவுள்ள ரணில்

Share

மொட்டுடன் சங்கமித்து ஜனாதிபதி வேட்பாளராகவுள்ள ரணில்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. தெரிவித்தார்.

மூன்றெழுத்துடையவரே மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். இன்னும் ஒன்றரை மாதமளவில் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்கக்கூடியதாக இருக்கும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்பினராகி ஜனாதிபதி வேட்பாளராக வரலாம்.

ஜனாதிபதி வேட்பாளரை முன்கூட்டியே முன்னிறுத்துவது எமது நோக்கமல்ல. ஜனாதிபதித் தேர்தல் வரும்போது நாட்டு மக்கள் எப்படிப்பட்ட வேட்பாளரை எதிர்பார்க்கின்றார்கள் என்பதைக் கணிக்க முடியாது.

அதற்கமைய, மக்களின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களைக் கருத்தில்கொண்டு வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

அந்த வேட்பாளர் நிச்சயமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்பினராக இருப்பார் என தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
Untitled 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹபராதுவ யுவதியின் மரணம்: மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்து என பிரேதப் பரிசோதனையில் தகவல்

காலி, ஹபராதுவ கொக்வத்தை பகுதியில் கடந்த 3-ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட மின்னல் தாக்கத்தின் போது...

Untitled 10
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்வு: ஒரு அவுண்ஸ் தங்கம் 4,625 டொலராகப் பதிவு

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச அரசியல் ரீதியான நிச்சயமற்ற தன்மைகள்...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பல்கலைக்கழகப் பிரவேச விண்ணப்பம்: மே 19 வரை கால அவகாசம் நீட்டிப்பு என ஆணைக்குழு அறிவிப்பு

2025-ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளம் கிவுல பகுதியில் மர்ம மரணம்: போதைக்கு அடிமையான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

புத்தளம், கிவுல (Kiwula) பகுதியில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற சந்தியொன்றில், 41 வயதுடைய அமில சந்தருவன்...