tamilni 7 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி ரணிலின் புத்தாண்டு வாழ்த்து செய்தி

Share

ஒவ்வொருவருக்கும் ஆயிரத்தோரு தனிப்பட்ட அபிலாஷைகள் இருந்தாலும், அனைத்திலும் வெற்றியடைவதற்கு தாய்நாட்டை தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து உயர்த்த வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிறந்திருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான வாழ்த்து செய்தியிலேயே இதனை கூறியுள்ளார்.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வகையில், இந்த வருடமும் பூக்கள் நிறைந்த பாதை சுமூகமான பாதையாக இல்லாமல் சவாலான கடினமான பயணமாக அமையும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடந்த வருடத்தில் மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் கஷ்டங்கள் காரணமாக நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதில் வெற்றியடைய முடிந்தது.

அனைத்து இலங்கையர்களுக்கும் பொறுப்பு காணப்படுகிறது. நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பு சரியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஜனவரி மாதம் ஜானஸ் என்ற கடவுளின் பெயரால் சூட்டப்பட்டது. ஜானஸ் கடவுளுக்கு முன்பக்கம் மட்டுமல்ல, பின்பக்கமும் பார்க்க இரண்டு முகங்கள் இருக்கின்றது.

நாட்டுக்கான அந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கும் தாய்நாட்டை மீண்டும் எழுப்பும் சவாலை வெற்றிகொள்வதற்கும் புத்தாண்டில் தீர்மானம் எடுக்குமாறும் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றில் மக்களை வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...