tamilni 154 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ் எம்.பிக்களுக்கு கறாரான பதிலை கூறிய ரணில்

Share

தமிழ் எம்.பிக்களுக்கு கறாரான பதிலை கூறிய ரணில்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்க முடியுமானபோதும், காவல்துறை அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாதென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் கட்சி எம்.பி.க்களுக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்று நண்பகல் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடந்த சந்திப்பிலேயே ரணில் இந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

இங்கு ரணில் விக்கிரமசிங்க, தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பில் கருத்துரைத்தபோது, வலிகாமம் வடக்கிலுள்ள மக்களின் காணிகளை ‘குத்தகை’ (லீசிங்) அடிப்படையில் விடுவிப்பது தொடர்பில் ஆராய்வோம் எனக் கூறினார்.

இதனை கடுமையாக எதிர்த்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு, மக்களின் சொந்தக் காணிகளை எப்படி ”குத்தகை”அடிப்படையில் அவர்களுக்கு வழங்குவது? இது பெரும் அநீதியல்லவா? இதனை எமது மக்களோ, நாமோ எப்படி ஏற்றுக்கொள்வது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு ரணில் பதிலளிக்கையில், காணிகள் விடுவிப்பு தொடர்பில் சகல பக்கங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. நான் , அனைத்து பிரச்சினைகளையும் பார்க்க வேண்டும்.

எனவே முதலில் வடக்கு மக்களின் காணிகளை ”குத்தகை ”அடிப்படையில் அம்மக்களுக்கு வழங்குவோம். பின்னர் அதனை அவர்களுக்கு முழுமையாக உரித்தாக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

எனினும் இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

அத்துடன் இந்த காணி விடுவிப்பு வடக்கில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திலும் பெரும் பிரச்சினையாகவுள்ளது. அங்கும் பெருமளவு காணிகள், மேய்ச்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன அவையும் விடுவிக்கப்பட வேண்டும் என சாணக்கியன் வலியுறுத்தினார்.

அதேவேளை மன்னார் மாவட்டத்திலுள்ள காணிப்பிரச்சினைகள் தொடர்பில் சார்ள்ஸ் நிர்மலநாதனும் அதிபருக்கு சுட்டிக்காட்டினார்.

அதனைத்தொடர்ந்து கருத்துரைத்த ரணில், 13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் பல்கலைக்கழகங்களின் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக்கூறியபோது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீண்ட காலமாக தீர்க்கப்படாதுல்ல நிலையில் பல்கலைக்கழகங்களின் அதிகாரங்களை வழங்குவது ஒரு தீர்வா? முதலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள். என தெரிவித்துள்ளார்.

அத்துடன் காவல்துறை அதிகாரத்தின் நிலை என்னவென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ரணில் பதிலளிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தீர்வுகளை வழங்க முடியும்.

ஆனால் அதிலுள்ள காவல்துறை அதிகாரம் தொடர்பில் தற்போது பேச முடியாது. பேசினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...