24 667f7cfe0ff26 27
இலங்கைசெய்திகள்

ரணில் தொடர்பில் மகிந்தவின் முக்கிய தீர்மானம்

Share

ரணில் தொடர்பில் மகிந்தவின் முக்கிய தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளரை முன்வைக்காமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி வேட்பாளரை நியமிப்பது தொடர்பில் இடம்பெற்ற கூட்டத்தில் மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணிலுக்கு ஆதரவு வழங்க வேண்டும். எதிர்கால பயணத்தை ரணிலுடன் செல்ல வேண்டும்.

கட்சி என்ற ரீதியில் வேறு ஒருவரை வேட்பாளராக நியமிப்பது சரியில்லை என மகிந்த குறிப்பிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் சக்தியாக பசில் ராஜபக்ச மட்டுமே இருப்பார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
10 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை அதிகரிப்பு: மயூரு நெத்தி குமாரகேவின் விளக்கம் மற்றும் பின்னணி

நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை...

09 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து!

நீண்ட காலமாகத் தேக்கமடைந்திருந்த மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம்,...

08 9
உலகம்செய்திகள்

லெபனானில் போர் மோதல் தீவிரம்: சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு!

லெபனானில் தற்போது இடம்பெற்று வரும் கடுமையான போர் மோதல்கள் காரணமாக, சுமார் 7 லட்சம் மக்கள்...

07 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலையேற்றம்: பாடசாலை மாணவர் போக்குவரத்து கட்டணம் 5 சதவீதத்தால் உயர்வு!

எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 10) முதல் அமுலுக்கு வரும்...