tamilni 49 scaled
இலங்கைசெய்திகள்

ரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்த

Share

ரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்தரணிலுடன் மந்திராலோசனைக்கு தயாராகும் மகிந்த

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியுடன் தனியான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என அதன் செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று ஜனாதிபதியின் பேஜெட் வீதி இல்லத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே செயலாளர் இதனை அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடலுக்கு வருமாறு பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி அலுவலகம் அறிவித்திருந்தது.

அதற்கமைய, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

ஆனால் வேறு பல தரப்பினரும் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டதால், அதற்கு இணங்க முடியாது என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சி என்ற ரீதியில் தமது குழுவிற்கு தனியான கலந்துரையாடல் தேவை என தெரிவித்து அவர் கலந்துரையாடலை முடித்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...