tamilnic 6 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணில் தந்திரமானவர் அல்ல : அனுர திட்டவட்டம்

Share

ரணில் தந்திரமானவர் அல்ல : அனுர திட்டவட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவது போல் தந்திரமானவர் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற புதிய விவாதம் எழுந்துள்ளது. ரணில் தந்திரமானவர் என்று சிலர் சொல்கிறார்கள்.

எனினும் ரணில் கூறுவது போல் தந்திரமானவர் அல்ல. அவர் நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு; ஜனாதிபதியானார்.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலிலும் தப்பிக்க ஏதாவது செய்தால், தமது பதவி காலத்துக்கு முன்னரே அவர் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும்.

பிரதமராக பதவியேற்குமாறு கோட்டாபய ராஜபக்சவின் கோரிக்கையை சஜித் பிரேமதாச நிராகரித்ததன் காரணமாகவே ரணில் பிரதமராக முடிந்தது.

இல்லையெனில் ரணில் இப்போது வெறும் நாடாளுமன்ற உறுப்பினராகவே இருந்திருப்பார். பின்னர் சரத் பொன்சேகாவை பதவியேற்குமாறு கோரப்பட்டது.

எனினும் பொன்சேகா முடிவெடுப்பதற்கு மூன்று நாட்கள் தேவை என்று கூறியிருந்தார். இந்தநிலையில் மூன்று நாட்களுக்கு தாமதிக்க கோட்டாபய ராஜபக்சவினால் முடியவில்லை.

இதனையடுத்தே மூன்றாவது தெரிவாக ரணிலிடம் கோரிக்கை விடுத்தார். இதன்போது பதவியை ஏற்றுக்கொள்வதால் தனக்கு நட்டம் ஏதும் இல்லை என்பதால் அதனை ஏற்றுக்கொண்டார் என்று அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

இதேவேளை ஜனாதிபதியாக பதவியேற்றதால் ரணில் வீரர் அல்ல. மாறாக, மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட தம்மை சிறையில் அடைக்கவேண்டும் என்று கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியானமைக்காக, அவர் வெட்கப்பட வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் தேர்தல்களில் பெண்கள் தீர்க்கமான காரணியாக இருப்பார்கள் எனத் தெரிவித்த அவர், இலங்கையில் 56 சதவீத வாக்குகளை அவர்கள் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...