இலங்கைசெய்திகள்

வரலாற்றில் தோல்வியுற்ற அரசியல்வாதி ரணில்! சாகர காரியவசம் விமர்சனம்

Share
1 40
Share

வரலாற்றில் தோல்வியுற்ற அரசியல்வாதி ரணில்! சாகர காரியவசம் விமர்சனம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தோல்வியுற்ற ஒரு அரசியல் தலைவர் என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு ரணில் வி்க்ரமிசிங்க விடுத்துள்ள வேண்டுகோள் தொடர்பில் கருத்து வௌியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள சாகர காரியவசம், கடந்த காலங்களில் ரணில் விக்ரமசிங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை அழித்தார். தனது சொந்தக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் அடியோடு அழித்துவிட்டார்.

அவரது நீண்டநாள் கனவான ஜனாதிபதிப் பதவியை அடைந்து கொள்வதற்கு பொதுஜன பெரமுண கட்சி ஆதரவளித்தது. கடைசியில் எங்கள் கட்சியையும் அவர் அழித்துவிட்டார்.

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க ஆதரவளித்தது உண்மையில் எங்கள் கட்சி மேற்கொண்ட மிகப்பெரும் பிழையாகும். அதனால் தான் கடந்த தேர்தலில் நாங்கள் தோல்வியுற்றோம்.

அதே நேரம் ரணில் விக்ரமசிங்க வரலாற்றில் என்றைக்கும் தேர்தல்களில் வெற்றிபெற்றதேயில்லை. என்றைக்கும் அவர் தோல்வியுற்ற ஒரு அரசியல்வாதியே என்றும் சாகர காரியவசம் தொடர்ந்தும் விமர்சித்துள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...