14 23
இலங்கைசெய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

Share

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

கொழும்பில் தங்கியிருக்காது ஊர்களுக்குச் சென்று வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவிற்கு கம்பஹா மாவட்டமும், கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவிற்கு காலி மாவட்டமும், தேசிய அமைப்பாளர் சாகல ரட்நாயக்கவிற்கு கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டமும், உப தலைவர் அகில விராஜ் காரியவசத்திற்கு குருணாகல் மாவட்டமும், தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்கவிற்கு கொழும்பு மாவட்டமும் வடக்கு மாகாணமும், பொருளாளர் பீரே ஷருக்கிற்கு மாவனல்ல பகுதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் சிறிஸாந்த டியுடர், தேர்தல் செயற்பாட்டு பிரதானி சட்டததரணி டொனால்ட் பெரேரா ஆகியோர் கட்சித் தலைமையகத்திலிருந்து மாவட்ட இணைப்பு பணிகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
world 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பு: தனியார்மயமாக்கல் குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை!

தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு (SriLankan Airlines) புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்துக்கள் குறித்து அதிகாரிகளின் எச்சரிக்கை!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சாலைப் போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் பட்டாசு தொடர்பான...

world 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய...

world 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா ஜயவர்தன நியமனம்!

இலங்கை முதலீட்டுச் சபையின் (Board of Investment – BOI) பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா...