2 13
அரசியல்இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக மாறியுள்ள ரணில் : சஜித் பகிரங்கம்

Share

தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளராக மாறியுள்ள ரணில் : சஜித் பகிரங்கம்

தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளராக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) மாறியுள்ளார் எனவும் இந்தக் கூட்டணி தன்னைப் பார்த்து அஞ்சுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

கொலன்னாவயில் (Kolonnawa) நேற்று (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ” ரணில் மற்றும் அநுரவுக்கு (Anura Kumara Dissanayake ) இடையிலான புதிய ஒப்பந்த திரைப்படம் மக்கள் மத்தியில் இன்று திரையிடப்படுகிறது.

ரணிலுக்கு ஏதேனும் வழங்குவதாகத் தேசிய மக்கள் சக்தியினர் (NPP) ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனரா என்ற கேள்வி எழுகிறது.

நாட்டு மக்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி சேவையாற்றும் என்ற அச்சம் ரணில் மற்றும் அநுர கூட்டணியில் காணப்படுகிறது. எனவே, இத்தகைய டீல் கலாச்சாரத்தை இல்லாதொழித்து, சிறந்த கொள்கையுடனான அரசியல் கலாச்சாரத்தை ஐக்கிய மக்கள் கூட்டணி உருவாக்கும்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையினால் செல்வந்தர்கள் பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில் சாதாரண மக்கள் மீது வரிச்சுமை ஏற்றப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். எனவே, எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர், மக்களின் சுமைகளைக் குறைக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கை எட்டப்படும்“ என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...