8 7
இலங்கைசெய்திகள்

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

Share

சொத்து பிரகடனங்களை வழங்கிய அரசியல்வாதிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe), பிரதமர் தினேஷ் குணவர்தன(dinesh gunawardena), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(sajith premadasa), மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க(anura kuma dissanayaka)உள்ளிட்ட அரசியல்வாதிகள் குழுவொன்று சொத்துப் பிரகடனங்களை வழங்கியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

புதிய சொத்துப் பிரகடனச் சட்டத்தின் பிரகாரம், ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் உட்பட அனைத்துப் பொதுப் பிரதிநிதிகளும் சொத்துப் பிரகடனங்களைச் சமர்ப்பித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்ததோடு, இதன்படி ஒவ்வொரு வருடமும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்க வேண்டும்.

முன்னர், அரசியல்வாதிகளின் சொத்துப் பொறுப்பு அறிக்கைகள் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றம், மாகாண சபை அல்லது உள்ளூராட்சி சபையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தன.

ஆனால் புதிய சட்டத்தின்படி, அந்த சொத்துப் பொறுப்பு அறிக்கைகள் அனைத்தும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும்.

Share
தொடர்புடையது
MediaFile
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது: டிசம்பர் 16 வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (டிச 2) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை...

1654603198 litro gas distribution
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு: கட்டம் கட்டமாக விநியோகம்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG Cylinders) கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்...

25 692c8763b7367
செய்திகள்இலங்கை

இலங்கையில் அனர்த்த உயிரிழப்புகள் 465 ஆக அதிகரிப்பு; 366 பேர் காணாமல் போயினர் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக...

images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...