26 12
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்க குறித்து சாகல ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

Share

ரணில் விக்ரமசிங்க குறித்து சாகல ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசிடமிருந்து எதுவும் கோரவில்லை என ரணிலின் முன்னாள் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அரசிடமிருந்து சமையற்கலை நிபுணர்கள், குடைகள், வாகனங்கள் என பலவற்றை கோரியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு ஊடகவியலாளர்கள் சாகலவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அரசாங்கமொன்றில் ஜனாதிபதியாக, பிரதமராக அல்லது வேறும் உயர் பதவிகளை வகிக்கும் பொழுது அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படும் எனவும், அவர்கள் பதவியிலிருந்து விலகும் அதே நாளில் அவர்களுக்கான அச்சுறுத்தல்களும் நீங்கிடுமா என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக இவ்வாறான நிலைமைகளின் போது குறித்த உயர் பதவிகளை வகித்தவர்களுக்கு ஒன்றிரண்டு மாதங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு நடைமுறை வித்தியாசமானது எனவும் அரசியல் சாசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க நெருக்கடியான நேரத்தில் நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டார் எனவும் அவரது வீடு எரிக்கப்பட்ட நிலையில் அவர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார் எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வித பாதுகாப்பினையும் கோரவில்லை எனவும் அவரது பாதுகாப்பு பிரிவினர் சில உபகரணங்களை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...