26 12
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்க குறித்து சாகல ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

Share

ரணில் விக்ரமசிங்க குறித்து சாகல ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசிடமிருந்து எதுவும் கோரவில்லை என ரணிலின் முன்னாள் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க அரசிடமிருந்து சமையற்கலை நிபுணர்கள், குடைகள், வாகனங்கள் என பலவற்றை கோரியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு ஊடகவியலாளர்கள் சாகலவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அரசாங்கமொன்றில் ஜனாதிபதியாக, பிரதமராக அல்லது வேறும் உயர் பதவிகளை வகிக்கும் பொழுது அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படும் எனவும், அவர்கள் பதவியிலிருந்து விலகும் அதே நாளில் அவர்களுக்கான அச்சுறுத்தல்களும் நீங்கிடுமா என்பது குறித்து ஆராயப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக இவ்வாறான நிலைமைகளின் போது குறித்த உயர் பதவிகளை வகித்தவர்களுக்கு ஒன்றிரண்டு மாதங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு நடைமுறை வித்தியாசமானது எனவும் அரசியல் சாசனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க நெருக்கடியான நேரத்தில் நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டார் எனவும் அவரது வீடு எரிக்கப்பட்ட நிலையில் அவர் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார் எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வித பாதுகாப்பினையும் கோரவில்லை எனவும் அவரது பாதுகாப்பு பிரிவினர் சில உபகரணங்களை கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...