3 30 scaled
இலங்கை

ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னம் பறிபோகுமா! தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

Share

ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னம் பறிபோகுமா! தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

எனினும் இந்த சின்னத்திற்கு களுத்துறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுவொன்று உரிமை கோரியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் நான்கு உள்ளுராட்சி சபைகளுக்காக, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுவொன்றுக்கு எரிவாயு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டிருந்தது.

தமது சின்னத்தை ஜனாதிபதி தேர்தலில் வழங்கப்படக்கூடாது எனக்கூறி குறித்த சுயாதீன குழு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

எனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பனவற்றுக்கு தனித்தனியாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எனவே எரிவாயு சிலிண்டர் சின்னம் தொடர்பில் பிரச்சினைகள் எழாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலுக்கு தேர்தல் சின்னங்கள் மாறுபடும் எனவும், இதனால் ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னம் தொடர்பில் சர்ச்சை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாவட்டத்தில் போட்டியிடும் குழுவொன்று தெரிவு செய்யும் அதே சின்னத்தை வேறும் மாவட்டமொன்றில் மற்றுமோரு குழு தெரிவு செய்து போட்டியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட சின்னங்களில் ஒன்றையே தெரிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...

25 688ddffa557e6
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கட்டாயமாக்கப்பட்டுள்ள நடைமுறை: விதிமுறையை மீறினால் சட்ட நடவடிக்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களில் பின்புற பயணிகள் ஆசனப்பட்டி அணிவது நேற்று (01) முதல்...