3 30 scaled
இலங்கை

ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னம் பறிபோகுமா! தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

Share

ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னம் பறிபோகுமா! தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.

எனினும் இந்த சின்னத்திற்கு களுத்துறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுவொன்று உரிமை கோரியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் நான்கு உள்ளுராட்சி சபைகளுக்காக, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுவொன்றுக்கு எரிவாயு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டிருந்தது.

தமது சின்னத்தை ஜனாதிபதி தேர்தலில் வழங்கப்படக்கூடாது எனக்கூறி குறித்த சுயாதீன குழு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

எனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பனவற்றுக்கு தனித்தனியாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எனவே எரிவாயு சிலிண்டர் சின்னம் தொடர்பில் பிரச்சினைகள் எழாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலுக்கு தேர்தல் சின்னங்கள் மாறுபடும் எனவும், இதனால் ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னம் தொடர்பில் சர்ச்சை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாவட்டத்தில் போட்டியிடும் குழுவொன்று தெரிவு செய்யும் அதே சின்னத்தை வேறும் மாவட்டமொன்றில் மற்றுமோரு குழு தெரிவு செய்து போட்டியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட சின்னங்களில் ஒன்றையே தெரிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் முதியவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம், இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இன்று (மார்ச் 31, 2026) முதியவர் ஒருவரின் சடலம்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

ரஷ்ய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஏண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko), 05 நாட்கள் உத்தியோகபூர்வ...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் வளர்ச்சி: மார்ச் மாதத்தில் மாத்திரம் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை நடப்பு ஆண்டில் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், கடந்த மார்ச்...

Untitled 64
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாநகர சபைகள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!

மீதொட்டமுல்ல “பொதுவில் கும்புர” எனும் காணியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளைக் கொட்டியதன் மூலம், கொழும்பு மாநகர...