6 36
இலங்கைசெய்திகள்

ரணில் ஆட்சியின் அமைச்சரவை தீர்மானம்: அநுர அரசுக்கு விசேட அறிவிப்பு

Share

ரணில் ஆட்சியின் அமைச்சரவை தீர்மானம்: அநுர அரசுக்கு விசேட அறிவிப்பு

அரச பணியாளர்களின்; சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த, அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

 

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க திட்டமிட்டிருந்ததாகவும், நடப்பு அரசாங்கம், சம்பள அதிகரிப்பை வழங்கப்படாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்குள்ளது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

அரச பணியாளர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அனைத்து அரச பணியாளர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து சம்பள அதிகரிப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என கூறியுள்ளார்.

 

தமது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்க, பொருளாதார ஆலோசகர் சமரதுங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோருடனும் கலந்துரையாடியே, இறுதியில் இந்த சம்பள உயர்வை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

அதன்படி அரச பணியாளர்களின்; சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவை ஆவணத்தில் ஜனாதிபதி என்ற முறையில் தாம் கையெழுத்திட்டுள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தநிலையில், அமைச்சர் விஜித ஹேரத் இதற்கு முன்னர் அமைச்சரவையில் இருந்ததாக நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் எடுத்த தீர்மானம் முற்றிலும் சட்டபூர்வமானது என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...