6 36
இலங்கைசெய்திகள்

ரணில் ஆட்சியின் அமைச்சரவை தீர்மானம்: அநுர அரசுக்கு விசேட அறிவிப்பு

Share

ரணில் ஆட்சியின் அமைச்சரவை தீர்மானம்: அநுர அரசுக்கு விசேட அறிவிப்பு

அரச பணியாளர்களின்; சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த, அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

 

தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க திட்டமிட்டிருந்ததாகவும், நடப்பு அரசாங்கம், சம்பள அதிகரிப்பை வழங்கப்படாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்குள்ளது என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

அரச பணியாளர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று கொழும்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

அனைத்து அரச பணியாளர்களிடமிருந்தும் பெறப்பட்ட கோரிக்கைகளை பரிசீலித்து சம்பள அதிகரிப்பு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என கூறியுள்ளார்.

 

தமது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்க, பொருளாதார ஆலோசகர் சமரதுங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோருடனும் கலந்துரையாடியே, இறுதியில் இந்த சம்பள உயர்வை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

அதன்படி அரச பணியாளர்களின்; சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவை ஆவணத்தில் ஜனாதிபதி என்ற முறையில் தாம் கையெழுத்திட்டுள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்தநிலையில், அமைச்சர் விஜித ஹேரத் இதற்கு முன்னர் அமைச்சரவையில் இருந்ததாக நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் எடுத்த தீர்மானம் முற்றிலும் சட்டபூர்வமானது என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....