24 65fbb007e476d
அரசியல்இலங்கைசெய்திகள்

ரணிலை தோற்கடிக்க பசில் வகுத்துள்ள சூழ்ச்சி

Share

ரணிலை தோற்கடிக்க பசில் வகுத்துள்ள சூழ்ச்சி

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கைப்பற்றி வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளை தோற்கடிக்க இன்றைய மே தினத்தை தீர்க்கமான நாளாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுஜன பெரமுன தலைவர்கள் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் ஐக்கிய தேசியக் கட்சியை மிஞ்சும் வகையில் மே தினப் பிரச்சாரத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவும், மே தினக் கூட்டங்களில் அதிகபட்சமான கட்சி உறுப்பினர்களை பங்கேற்கச் செய்யவும் இரண்டு அடிப்படை கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளுக்காக உள்ளுராட்சி தலைவர்களுக்கு பெருமளவு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாமரை மொட்டு அலங்காரத்தை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை மிஞ்சும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தேவையான சகல பணமும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியினரை மே பேரணியில் பங்கேற்க வைப்பதற்கு தேவையான பணமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிப்பதற்கு பசில் ராஜபக்சவும் நாமல் ராஜபக்சவும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...

image 7d7149706b
செய்திகள்இலங்கை

ஆசிரியர் நியமனங்கள்: ‘நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரே பட்டதாரிகளுக்கு நியமனம்’ – கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

எதிர்காலத்தில் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்குவது குறித்து, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி...

images 10 2
செய்திகள்இலங்கை

தங்காலையில் தம்பதியினர் கொலை: ‘உனகுருவே சாந்தாவின்’ உறவினர்கள் என தகவல் – 5 பொலிஸ் குழுக்கள் துரித விசாரணை!

தங்காலை, உனகுருவ (Unakuruwa) பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாலை 6.55 மணியளவில் இடம்பெற்ற...

New Project 222
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்கத்தில் மண்சரிவு: ரயில் சேவைகள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டன!

மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் இன்று வியாழக்கிழமை (நவ 19) நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக...