24 66739dc4ca9b2
அரசியல்இலங்கைசெய்திகள்

மகிந்த கட்சிக்குள் தீவிரம் அடையும் மோதல் : வெளியேறிச் செல்லும் அரசியல்வாதிகள்

Share

மகிந்த கட்சிக்குள் தீவிரம் அடையும் மோதல் : வெளியேறிச் செல்லும் அரசியல்வாதிகள்

எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் மீண்டும் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

முதலில் ஜனாதிபதி மற்றும் பசில் ராஜபக்சவுடன் மாத்திரம் கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்ட போதிலும் துமிந்த திஸாநாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு குழுவும், மாற்றுக் குழுக்களும் இணைந்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவுடன் எந்தவிதமான கூட்டணியையும் மேற்கொள்ளப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்கள் ஜனாதிபதி முன்னிலையில் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், ஜனாதிபதியுடன் பயணம் ஒன்று இல்லை எனவும், பொதுஜன பெரமுன கொள்கைகளுக்கு எதிரான குழு ஒன்றே அவருடன் இருப்பதாகவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.​​

நாமலின் ஆட்சேபனை ஒருபுறம் வைத்துவிட்டு அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு உதவும் போது இவ்வாறு கருத்து வெளியிட்டால் மன முறிவுகள் மாத்திரமே ஏற்படும் என பசிலுடன் விவாதத்திற்கு வந்த வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மாற்றுக் குழுக்களை ஜனாதிபதி தெரிவு செய்ய வேண்டும் என மாற்றுக் குழுவின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...