விரைவில் பேச்சு என்கிறார் ரணில்!
இலங்கைசெய்திகள்

விரைவில் பேச்சு என்கிறார் ரணில்!

Share

விரைவில் பேச்சு என்கிறார் ரணில்!

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சின் அடுத்த சுற்றுப் பேச்சு விரைவில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசியல் தீர்வு தொடர்பில் வெளிநாடுகளில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அடுத்த கட்டப் பேச்சு எப்போது நடைபெறும் என ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்

“பேச்சு விரைவில் நடக்கும். அது தொடர்பில் சந்தேகப்படத் தேவையில்லை. அரசியல் தீர்வில் உறுதியாக இருக்கின்றேன்.

வெளிநாடு சென்றமையால் திட்டமிட்டவாறு பேச்சு நடக்கவில்லை. சர்வதேச சமூகத்திடம் அரசியல் தீர்வு தொடர்பில் கருத்துரைத்துள்ளேன்.

எனவே, அதைச் செயற்படுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை – அரசுடனான பேச்சு தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனைக் கேட்டபோது,

“ஜனாதிபதி ரணில் கூறிய திகதியில் பேச்சு நடக்கவில்லை. அடுத்த கட்டப் பேச்சு சம்பந்தமாக அறிவிக்கப்படவில்லை.

தொடர்ந்து இவ்வாறு விட்டுக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் தீர்க்கமான முடிவு எடுப்போம் என்று ஜனாதிபதியிடம் நேரடியாக கடைசி சந்திப்பில் தெரிவித்துவிட்டேன்.

விரைவில் ஒரு முடிவு எடுப்போம். ஒரு வாரத்தின் பின்னர் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்” என பதிலளித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1745584150 imf sri lanka
இலங்கைசெய்திகள்

பொருளாதாரப் பாதிப்பைக் குறைக்க IMF தயார்: டித்வா புயலுக்குப் பிந்தைய இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவு!

நாடு முழுவதும் உயிர்களைப் பலிகொண்டும், ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்தும் உள்ள அழிவுகரமான புயல் மற்றும் வெள்ள...

image ac8d38d022
இலங்கைசெய்திகள்

சேதமடைந்த பாலங்களைப் புனரமைக்க நெதர்லாந்து ஆதரவு: பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் தூதுவர் இணக்கம்!

அண்மையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள பாலங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிக்க இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர்...

images 7
இலங்கைசெய்திகள்

சஜித் பிரேமதாஸவின் கோரிக்கை- IMF ஒப்பந்தத்தை இரத்துச் செய்க!

அண்மையில் ஏற்பட்ட பாரிய பேரழிவைத் (Disaster) தொடர்ந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப புதியதொரு தேசியத் திட்டத்தை...

25 69318975951cf
இலங்கைசெய்திகள்

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 300 மில்லியன் நன்கொடை: இலங்கை கிரிக்கெட் சபைத் தீர்மானம்!

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட பாரிய பேரழிவைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding...