இலங்கைசெய்திகள்

விரைவில் பேச்சு என்கிறார் ரணில்!

Share
விரைவில் பேச்சு என்கிறார் ரணில்!
Share

விரைவில் பேச்சு என்கிறார் ரணில்!

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னெடுத்துள்ள பேச்சின் அடுத்த சுற்றுப் பேச்சு விரைவில் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அரசியல் தீர்வு தொடர்பில் வெளிநாடுகளில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் அடுத்த கட்டப் பேச்சு எப்போது நடைபெறும் என ஜனாதிபதியிடம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்

“பேச்சு விரைவில் நடக்கும். அது தொடர்பில் சந்தேகப்படத் தேவையில்லை. அரசியல் தீர்வில் உறுதியாக இருக்கின்றேன்.

வெளிநாடு சென்றமையால் திட்டமிட்டவாறு பேச்சு நடக்கவில்லை. சர்வதேச சமூகத்திடம் அரசியல் தீர்வு தொடர்பில் கருத்துரைத்துள்ளேன்.

எனவே, அதைச் செயற்படுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை – அரசுடனான பேச்சு தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனைக் கேட்டபோது,

“ஜனாதிபதி ரணில் கூறிய திகதியில் பேச்சு நடக்கவில்லை. அடுத்த கட்டப் பேச்சு சம்பந்தமாக அறிவிக்கப்படவில்லை.

தொடர்ந்து இவ்வாறு விட்டுக்கொண்டிருக்க முடியாது. நாங்கள் தீர்க்கமான முடிவு எடுப்போம் என்று ஜனாதிபதியிடம் நேரடியாக கடைசி சந்திப்பில் தெரிவித்துவிட்டேன்.

விரைவில் ஒரு முடிவு எடுப்போம். ஒரு வாரத்தின் பின்னர் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்” என பதிலளித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...