22 11
இலங்கைசெய்திகள்

சம்பிக்க ரணவக்க சஜித்திடம் சரணடைந்தமைக்கான காரணத்தை வெளியிட்ட கம்மன்பில

Share

சம்பிக்க ரணவக்க சஜித்திடம் சரணடைந்தமைக்கான காரணத்தை வெளியிட்ட கம்மன்பில

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகிய தரப்புக்களினால் நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் சம்பிக்க ரணவக்க சஜித்திடம் சரணடைந்தார் என நாடாளுமன் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சம்பிக்க எம்முடன் இணைந்து கொள்ள முயற்சித்தார் நாம் அவரை ஏற்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ரணிலை போற்றினாலும் சம்பிக்கவை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என அரசாங்க தரப்பும் கூறியதாக கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அனைத்து தரப்பினரும் நிராகரித்த காரணத்தினால் சம்பிக்க ரணவக்க மீண்டும் சஜித் தரப்பிடமே செல்ல நேரிட்டதாக தெரிவித்துள்ளார்.

யாரும் ஏற்றுக்கொள்ளாதவர்களை சஜித் தரப்பு ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....