22 11
இலங்கைசெய்திகள்

சம்பிக்க ரணவக்க சஜித்திடம் சரணடைந்தமைக்கான காரணத்தை வெளியிட்ட கம்மன்பில

Share

சம்பிக்க ரணவக்க சஜித்திடம் சரணடைந்தமைக்கான காரணத்தை வெளியிட்ட கம்மன்பில

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகிய தரப்புக்களினால் நிராகரிக்கப்பட்ட காரணத்தினால் சம்பிக்க ரணவக்க சஜித்திடம் சரணடைந்தார் என நாடாளுமன் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சம்பிக்க எம்முடன் இணைந்து கொள்ள முயற்சித்தார் நாம் அவரை ஏற்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறியதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ரணிலை போற்றினாலும் சம்பிக்கவை அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப் போவதில்லை என அரசாங்க தரப்பும் கூறியதாக கம்மன்பில மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அனைத்து தரப்பினரும் நிராகரித்த காரணத்தினால் சம்பிக்க ரணவக்க மீண்டும் சஜித் தரப்பிடமே செல்ல நேரிட்டதாக தெரிவித்துள்ளார்.

யாரும் ஏற்றுக்கொள்ளாதவர்களை சஜித் தரப்பு ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...