7 19
இலங்கைசெய்திகள்

ராஜபக்சக்களுக்குப் பயந்த ரணில்: எழுந்துள்ள விமர்சனம்

Share

ராஜபக்சக்களுக்குப் பயந்த ரணில்: எழுந்துள்ள விமர்சனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சக்களுக்குப் பயந்து தன்னுடைய காலத்தைச் செலவழித்தவர் என அகில இலங்கை மகா சபை கட்சியின் தலைவர் காசிலிங்கம் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வெய் ஓப் மீடியா கற்கை நிலையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது எனத் தெளிவாகத்தான் இருந்தோம். ரணில் பல வாக்குறுதிகளை எங்களுக்குக் கொடுத்திருந்தார். முதலில் அவருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது அவர் நீங்கள் கூறுங்கள் எல்லாவற்றையும் செய்கின்றேன் என்றார்.

அப்போது, மாகாண சபைக்குக் கீழ் இருந்த பல பாடசாலைகளை மத்திய அரசின் கீழ் தேசிய பாடசாலைகளாகவும், வைத்தியசாலைகளையும் தேசிய வைத்தியசாலைகளாகவும் மாற்றியுள்ளனர்.

இதனை உடனடியாக மாகாணத்தின் கீழ் மாற்ற வேண்டும். இதற்குச் சட்டம் இயற்ற வேண்டியதில்லை. இதற்கு ஒரு உத்தரவாதம் வழங்கினால் சரி என்றோம்.

மேலும், கச்சேரிகளை ஒரு அமைச்சரவை தீர்மானம் எடுத்து மாற்ற முடியும் என்றோம். அதற்கும் உடன்படுவதாக அவர் தெரிவித்தார். நாங்கள் விசேட அதிகாரத்தைக் கொண்டு இவற்றையெல்லாம் உருவாக்க முடியும் என்றோம்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...