கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷியின் மரணத்துடன் தொடர்புபட்டவர் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர் என்பதால் உண்மையை மறைக்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) குற்றஞ் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்றையதினம் (21) உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அத்தோடு, இந்த நாட்டிலே பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு தாம் விரும்பவில்லை.அரசாங்கத்தை அன்புடன் ஆதரிக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டிலே அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும், நாட்டை விழ விடாமல் பார்ப்பதற்கும் தாம் உதவு செய்வோம் எனவும் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.