3 12
இலங்கைசெய்திகள்

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு குறித்து பேசும் இலங்கை அமைச்சர்

Share

இலங்கை இந்திய கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு குறித்து பேசும் இலங்கை அமைச்சர்

இலங்கையின் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் கடற்றொழிலாளர்களுக்கு இடையில், பாக் வளைகுடாவில் நீடித்து வரும் கடற்றொழிலாளர் மோதலுக்கு இந்திய தரப்புகள் இழுவை முறையை பயன்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே தீர்வு காண முடியும் என்று கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல வருடங்களாக கடற்றொழிலாளர் பிரச்சினை முக்கிய இராஜதந்திரப் பிரச்சினையாக இருந்து வருகிறது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்த வாரம் இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ள விஜயத்தின் போது, இது தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உட்பட அனைத்து இனக்குழுக்கள் மற்றும் புவியியல் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும் ஆணையை வழங்கியுள்ளனர்.

எனவே, அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு தமது கட்சிக்கு உள்ளதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டில் 17.2 கிலோவாக இருந்த நாட்டின் தனிநபர் மீன் நுகர்வு இப்போது 11.07 கிலோவாகக் குறைந்துள்ளது. இது மக்களின் புரத உட்கொள்ளல் குறைவதைப் பிரதிபலிக்கிறது.

இந்தநிலையில், ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிசெய்ய கடல் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதையெல்லாம் செய்ய, இலங்கையின் கடல் மற்றும் நமது கடல் பல்லுயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சந்திரசேகர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் பலருக்கு இன்னும் தமிழ்நாட்டில் குடும்ப உறவுகள் உள்ளன.

எனவே, கடற்றொழில் பிரச்சனையில் பாரிய பொறுப்பை ஏற்க வேண்டும் என இந்திய மற்றும் தமிழக மக்களையும் அரசாங்கங்களையும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...