5 14
இலங்கைசெய்திகள்

தேர்தல் அரசியலில் இருந்து பின்வாங்கும் ராஜபக்சக்கள்

Share

தேர்தல் அரசியலில் இருந்து பின்வாங்கும் ராஜபக்சக்கள்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜபக்ச குடும்பம் மிக நீண்ட அரசியல் வரலாற்றை கொண்ட குடும்பம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, சமல் ராஜபக்ச ஆகியோர் இம்முறை பொது தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மஹிந்த ராஜபக்சவின் சிரேஸ்ட புதல்வரும், முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்சவும் இம்முறை பொது தேர்தலில் நேரடியாக போட்டியிடவில்லை எனவும் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசியல் களத்தில் கடந்த சில தசாப்தங்களாக பெரும் செல்வாக்கு செலுத்தி வந்த ராஜபக்ச குடும்பம் இம்முறை தேர்தலில் பின்வாங்க நேரிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார் எனினும் ஐந்து வீத வாக்குகளையேனும் அவரால் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...