4 6
இலங்கைசெய்திகள்

ராஜபக்ச குடும்பத்துக்கு விரைவில் தண்டனை: வசந்த சமரசிங்ச எச்சரிக்கை

Share

ராஜபக்ச குடும்பத்துக்கு விரைவில் தண்டனை: வசந்த சமரசிங்ச எச்சரிக்கை

நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்த மக்கள் பணம் எங்கிருக்கின்றது என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக் கொணரவுள்ளதாக வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பம், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டிய தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்துள்ளன.

இந்நிலையில், தங்களுடைய ஊழல்களை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் ​போனது ஏன் என்று அண்மையில் நாமல் ராஜபக்ச சாடியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, நாமல் ராஜபக்ச ​போன்றவர்கள் கொள்ளையடித்த பணம் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? வேறு வகையில் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக் கொண்டு வருவோம்.

இது ஊழல்வாதிகள் தாங்கள் இன்னும் மாட்டிக் கொள்ளவில்லை என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி மணித்துளிகள் ஆகும்.

மிக விரைவில் அவர்கள் கூண்டோடு மாட்டிக் கொண்டு தங்கள் தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
WhatsApp Image 2025 11 27 at 23.47.04 f47798a4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மழையிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் ‘மாவீரர் தின...

images 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம்: எலிக்காய்ச்சல் காரணமாக 17 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – அல்வாய் கிழக்கு, அல்வாய் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன் எலிக்காய்ச்சல்...

images 10
செய்திகள்இலங்கை

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 மில்லியன் இழப்பீடு: ஜனாதிபதி பணிப்புரை!

அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு...

PowerCut 1200px 22 11 28 1000x600 1
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலை: மின் விநியோக மார்க்கம் பாதிப்பால் பல பகுதிகளில் மின்சாரம் தடை!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாகப் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை...