1 49
இலங்கைசெய்திகள்

பழிவாங்கப்படும் ராஜபக்சர்கள்! பாதாள குழுக்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு

Share

தற்போதைய அரசாங்கம் தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான பழி ராஜபக்சர்கள் மீது சுமத்தப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறைகளையும், அச்சுறுத்தலையும் அரசாங்கம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது என்றும், நாமல் ஊருக்கு சென்றால் புதைகுழிக்கு செல்ல நேரிடும் என்று அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளமை மிகவும் பாரதூரமானது எனவும் கூறியுள்ளார்

அவர் மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல சிறந்த திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவற்றை தற்போது குறிப்பிடப்போவதில்லை. ஏனெனில் அவற்றை ஆளும் தரப்பின் 158 உறுப்பினர்கள் குறிப்பிடுவார்கள்.

குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் 69 இலட்ச மக்களாணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன பற்றி பேசப்படவில்லை. ஆனால் தற்போது அதிகளவில் பேசப்படுகிறது.

அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கிராமத்துக்குச் சென்றால் புதைகுழிக்கு செல்ல நேரிடும் என்று குறிப்பிடுகிறார்.

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த பழியையும் அரசாங்கம் கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்துகிறது.

இது மிகவும் பாரதூரமானது. இது பத்தரமுல்லை அலுவலகத்தின் திட்டமா, மக்கள் விடுதலை முன்னணியின் உண்மையான முகம் தற்போது வெளிவருகிறது” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...