1 49
இலங்கைசெய்திகள்

பழிவாங்கப்படும் ராஜபக்சர்கள்! பாதாள குழுக்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு

Share

தற்போதைய அரசாங்கம் தமது இயலாமையை மறைத்துக் கொள்வதற்கு பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பான பழி ராஜபக்சர்கள் மீது சுமத்தப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறைகளையும், அச்சுறுத்தலையும் அரசாங்கம் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது என்றும், நாமல் ஊருக்கு சென்றால் புதைகுழிக்கு செல்ல நேரிடும் என்று அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளமை மிகவும் பாரதூரமானது எனவும் கூறியுள்ளார்

அவர் மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல சிறந்த திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவற்றை தற்போது குறிப்பிடப்போவதில்லை. ஏனெனில் அவற்றை ஆளும் தரப்பின் 158 உறுப்பினர்கள் குறிப்பிடுவார்கள்.

குறைகளை சுட்டிக்காட்டுகிறேன். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் 69 இலட்ச மக்களாணையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் எதிர்வரும் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைப்பெறவுள்ளது. கடந்த காலங்களில் பொதுஜன பெரமுன பற்றி பேசப்படவில்லை. ஆனால் தற்போது அதிகளவில் பேசப்படுகிறது.

அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீதான அடக்குமுறை மற்றும் அச்சுறுத்தல்களை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச கிராமத்துக்குச் சென்றால் புதைகுழிக்கு செல்ல நேரிடும் என்று குறிப்பிடுகிறார்.

பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த பழியையும் அரசாங்கம் கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்துகிறது.

இது மிகவும் பாரதூரமானது. இது பத்தரமுல்லை அலுவலகத்தின் திட்டமா, மக்கள் விடுதலை முன்னணியின் உண்மையான முகம் தற்போது வெளிவருகிறது” என்றார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...