tamilni 471 scaled
இலங்கைசெய்திகள்

சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு

Share

சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு

இலங்கையில் சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து மூலம் பொதிகள் மற்றும் சரக்குகள் கொண்டு செல்வதற்கான கட்டணங்கள் 80 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட உள்ளது.

பொதியொன்றுக்காக இதுவரையில் அறவீடு செய்யப்பட்ட குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.

பொதியின் பெறுமதியின் அடிப்படையில் புதிய கட்டண அறவீட்டுமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுவரை காலமும் பொதியின் எடையின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் பயண தூரத்தின் அடிப்படையில் கட்டண அறவீடு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்பி வைக்கப்படும் பொருட்களின் பெறுமதியின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...