tamilni 471 scaled
இலங்கைசெய்திகள்

சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு

Share

சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு

இலங்கையில் சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து மூலம் பொதிகள் மற்றும் சரக்குகள் கொண்டு செல்வதற்கான கட்டணங்கள் 80 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட உள்ளது.

பொதியொன்றுக்காக இதுவரையில் அறவீடு செய்யப்பட்ட குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.

பொதியின் பெறுமதியின் அடிப்படையில் புதிய கட்டண அறவீட்டுமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுவரை காலமும் பொதியின் எடையின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் பயண தூரத்தின் அடிப்படையில் கட்டண அறவீடு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்பி வைக்கப்படும் பொருட்களின் பெறுமதியின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...