இலங்கைசெய்திகள்

சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு

Share
tamilni 471 scaled
Share

சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிப்பு

இலங்கையில் சரக்கு தொடருந்து கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் இவ்வாறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து மூலம் பொதிகள் மற்றும் சரக்குகள் கொண்டு செல்வதற்கான கட்டணங்கள் 80 சதவீதத்திற்கு மேல் உயர்த்தப்பட உள்ளது.

பொதியொன்றுக்காக இதுவரையில் அறவீடு செய்யப்பட்ட குறைந்தபட்ச கட்டணம் 50 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது.

பொதியின் பெறுமதியின் அடிப்படையில் புதிய கட்டண அறவீட்டுமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுவரை காலமும் பொதியின் எடையின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், எதிர்வரும் காலங்களில் பயண தூரத்தின் அடிப்படையில் கட்டண அறவீடு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்பி வைக்கப்படும் பொருட்களின் பெறுமதியின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...