1 59
இலங்கைசெய்திகள்

மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய அநுர ஆட்சி: இராதாகிருஷ்ணன் விமர்சனம்

Share

மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திய அநுர ஆட்சி: இராதாகிருஷ்ணன் விமர்சனம்

தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டிருப்பதை எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளிகாட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,

பொதுவாக இலங்கை அரசியலில் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து அதில் வெற்றிப்பெறும் ஜனாதிபதி மற்றும் அவருடைய கட்சி அடுத்து வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாரியளவில் வெற்றிப்பெறுவதை நாம் கடந்த காலங்களில் பார்த்திருக்கின்றோம்.

 

ஆனால், ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஒரு மாதத்தின் பின்பு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற முடியாமல் இருக்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் இந்த ஜனாதிபதியின் மீதும், அரசாங்கத்தின் மீதும் அதிருப்தி ஏற்பட்டிருப்பது காட்டுகின்றது.

 

ஜனாதிபதி எதிர்கட்சியில் இருந்த போது தான் பதவிக்கு வந்தால் 48 மணித்தியாலயங்களில் பல மாற்றங்கள் செய்வதாக கூறினார். பல அதிசயங்கள் செய்யக்கூடிய திறமை என்னிடமும் தனது குழுவினரிடமும் இருப்பதாக கூறினார். ஆனால் இப்பொழுது நான் மந்திரவாதியோ, தந்திரவாதியோ இல்லை என கூறினார்.

 

இது தான் உண்மையான நிலைமை. பதவிக்கு வருவதற்கு முன்பும் எதிர்கட்சியில் இருந்துக் கொண்டும் எதை வேண்டுமானாலும் பேசலாம்.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...