rtjy 18 scaled
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரங்களில் புதிய அம்சம்

Share

சாரதி அனுமதிப்பத்திரங்களில் புதிய அம்சம்

இலத்திரனியல் அல்லது ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திரங்களில் சிம் அட்டைகளுக்கு பதிலாக கியூஆர் குறியீட்டைக் கொண்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களை வழங்கும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) தற்போதுள்ள அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த திட்டம் தொடர்பில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க விடுத்துள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 16ஆம் திகதி இலங்கை இராணுவம் சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சடித்து வழங்குவதை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திடம் ஒப்படைத்ததன் பின்னர், இந்த இலத்திரனியல் சாரதி அனுமதிப்பத்திரத்தின் அச்சிடும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த அக்டோபர் 11ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து குறித்த சாரதி அனுமதிப்பத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியால், சிம் அட்டைகளுக்கான “சிப் ரீடிங் யூனிட்களை” இறக்குமதி செய்வது கடினமாக காணப்படுகிறது.

இதன்காரணமாக அட்டைகளை வைத்திருப்பவரின் தகவல்களை எளிதாகப் படிக்க, கியூஆர் குறியீட்டை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், பொலிஸாருக்கு மாத்திரம் கியூஆர் குறியீடுகள் பற்றிய தகவல்களை படிக்க தனி தொலைபேசி மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய ஸ்மார்ட் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான குற்றத்திற்கான புள்ளிகள் அமைப்பு சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...