32 7
இலங்கைசெய்திகள்

பிரமிட் திட்டத்தின் ஊடாக பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குவித்த வைத்தியர்

Share

பிரமிட் திட்டத்தின் ஊடாக பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குவித்த வைத்தியர்

பிரமிட் திட்டமொன்றின் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தைக் கொண்டு 18 கோடி ரூபா பெறுமதியான சொத்து கொள்வனவு செய்த வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

ஒன்மெக்ஸ் டி.ரீ என்ற பிரமிட் கொடுக்கல் வாங்கல் திட்டத்தின் ஊடாக குறித்த மருத்துவர் பணம் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்மெக்ஸ் மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரும், நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான சம்பத் சந்தருவான் என்பவரின் பெயருக்கு இந்த வைத்தியரின் சொத்து ஒரே நாளில் கைமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

18 கோடி ரூபா பெறுமதியான இந்த சொத்து பிரமிட் வர்த்தகம் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வைத்தியரின் சொத்துக்களை கைமாற்றுவதற்கு தடை விதிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.

இருப்பினும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் காரணத்தினால் சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான வைத்தியர் சொத்துக்களை கைமாற்றுவதற்கு தடை விதித்த நீதிமன்றம், 15 கோடி ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் அடிப்படையில் வைத்தியருக்கு பிணை வழங்கியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...