32 7
இலங்கைசெய்திகள்

பிரமிட் திட்டத்தின் ஊடாக பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குவித்த வைத்தியர்

Share

பிரமிட் திட்டத்தின் ஊடாக பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குவித்த வைத்தியர்

பிரமிட் திட்டமொன்றின் மூலம் ஈட்டப்பட்ட வருமானத்தைக் கொண்டு 18 கோடி ரூபா பெறுமதியான சொத்து கொள்வனவு செய்த வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

ஒன்மெக்ஸ் டி.ரீ என்ற பிரமிட் கொடுக்கல் வாங்கல் திட்டத்தின் ஊடாக குறித்த மருத்துவர் பணம் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் வைத்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒன்மெக்ஸ் மோசடியுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரும், நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான சம்பத் சந்தருவான் என்பவரின் பெயருக்கு இந்த வைத்தியரின் சொத்து ஒரே நாளில் கைமாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

18 கோடி ரூபா பெறுமதியான இந்த சொத்து பிரமிட் வர்த்தகம் மூலம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த வைத்தியரின் சொத்துக்களை கைமாற்றுவதற்கு தடை விதிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.

இருப்பினும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் காரணத்தினால் சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான வைத்தியர் சொத்துக்களை கைமாற்றுவதற்கு தடை விதித்த நீதிமன்றம், 15 கோடி ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் அடிப்படையில் வைத்தியருக்கு பிணை வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...