22 4
இலங்கைசெய்திகள்

பாதுகாவலரை கொலை செய்துவிட்டு 1.4 மில்லியன் ரூபா பணம் கொள்ளை

Share

புத்தளம் பகுதியில், தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையத்தின் பாதுகாவலொருவர் அடித்துக் கொலை செய்யப்டுள்ளதுடன், 1.4 மில்லியன் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று(11) மாலை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சிலாபம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய காவலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இரவு பாதுகாப்பு கடமைகளில் இவர் ஈடுபட்டிருந்ததாகவும், மறுநாள் காலை அவர் தலையில் கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்ததாகவும் குறித்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், அந்த நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாட்டினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை முந்தலம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Kandy
செய்திகள்இலங்கை

கண்டி – கீழ் கடுகண்ணாவ மண் சரிவு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு; வீதி மறு அறிவித்தல் வரை மூடல்!

கண்டி – கீழ் கடுகண்ணாவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக...

500x300 20809002 tvkvijay29102025
செய்திகள்இந்தியா

வீட்டுக்கு நிரந்தர வீடு, உந்துருளி: மக்கள் சந்திப்பில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய் உறுதி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு...

Aswasuma Welfare benifits Board 1200px 2023 07 11 1000x600 1
செய்திகள்இலங்கை

அஸ்வெசும’ பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கின்மையால் சலுகைகள் கிடைக்கவில்லை – கணக்காய்வு அறிக்கை!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள 43,703 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்குகள் இல்லாத காரணத்தினால், அவர்களுக்கான...

ticket scaled 1
செய்திகள்இலங்கை

பேருந்துப் பயணங்களுக்கு இலத்திரனியல் அட்டை கட்டணம்: திட்டம் நாளை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பம்!

பேருந்துப் பயணங்களுக்கான இலத்திரனியல் அட்டை கட்டண முறையை (Electronic Card Payment) அறிமுகப்படுத்தும் திட்டம் நாளை...