22 4
இலங்கைசெய்திகள்

பாதுகாவலரை கொலை செய்துவிட்டு 1.4 மில்லியன் ரூபா பணம் கொள்ளை

Share

புத்தளம் பகுதியில், தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிலையத்தின் பாதுகாவலொருவர் அடித்துக் கொலை செய்யப்டுள்ளதுடன், 1.4 மில்லியன் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று(11) மாலை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சிலாபம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய காவலாளி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இரவு பாதுகாப்பு கடமைகளில் இவர் ஈடுபட்டிருந்ததாகவும், மறுநாள் காலை அவர் தலையில் கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்ததாகவும் குறித்த தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், அந்த நிறுவனத்தில் இருந்து கிட்டத்தட்ட 1.4 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முறைப்பாட்டினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை முந்தலம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...