11 27
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

Share

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான மேலதிக தகவல்களைக் கோருமாறு இலங்கை மின்சார சபைக்கு (CEB) அறிவிக்க இன்று (28) நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டு மீளாய்வுக்காக, CEB அண்மையில் கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது.

 

முன்மொழியப்பட்ட மீளாய்வுகள் இன்று PUCSL அதிகாரிகளால் கலந்துரையாடப்பட உள்ளதாக PUCSL நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

ஆணைக்குழுவுக்கு கூடுதல் திருத்தங்கள் தேவைப்பட்டால், மேலும் நடவடிக்கைகள் தேவைப்பட்டால், இலங்கை மின்சார சபைக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின் கட்டண திருத்தங்கள் மார்ச் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன. இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 21.9 சதவீதம் மின் கட்டணம் திருத்தப்பட்டது.

 

இரண்டாவது காலாண்டின் மின் திருத்தம் ஜூலை 16 அன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 22.5% மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (Public Utilities Commission of Sri Lanka) நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்திருந்தார்.

 

ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. அதன்படி, மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க முன்மொழிந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...

08 4
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை அருகே மற்றொரு ஈரானிய கப்பல்: மனிதாபிமான அடிப்படையில் அனுமதி கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நிலைகொண்டுள்ள இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr என...