11 27
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

Share

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான மேலதிக தகவல்களைக் கோருமாறு இலங்கை மின்சார சபைக்கு (CEB) அறிவிக்க இன்று (28) நடவடிக்கை எடுப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டு மீளாய்வுக்காக, CEB அண்மையில் கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது.

 

முன்மொழியப்பட்ட மீளாய்வுகள் இன்று PUCSL அதிகாரிகளால் கலந்துரையாடப்பட உள்ளதாக PUCSL நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

ஆணைக்குழுவுக்கு கூடுதல் திருத்தங்கள் தேவைப்பட்டால், மேலும் நடவடிக்கைகள் தேவைப்பட்டால், இலங்கை மின்சார சபைக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின் கட்டண திருத்தங்கள் மார்ச் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன. இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 21.9 சதவீதம் மின் கட்டணம் திருத்தப்பட்டது.

 

இரண்டாவது காலாண்டின் மின் திருத்தம் ஜூலை 16 அன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 22.5% மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

 

டிசம்பர் மாதத்தில் அனைத்துத் துறைகளுக்கும் 6% மிதமான அளவில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படலாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (Public Utilities Commission of Sri Lanka) நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்திருந்தார்.

 

ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. அதன்படி, மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைக்க முன்மொழிந்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Share
தொடர்புடையது
world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...

world 33
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் கையிருப்பு சொத்துக்கள் மார்ச் மாதத்தில் வீழ்ச்சி: மத்திய வங்கி வெளியிட்ட புதிய அறிக்கை!

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 2026 மார்ச் மாத இறுதியில் 3.5 சதவீதம் வரை...

world 32
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டும்: ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து விரைவில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே...

world 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு: அடையாளம் காண்பதில் சிக்கல்!

நோர்வூட் பகுதியில் பாயும் கெசல்கமுவ ஆற்றில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் இன்று (ஏப்ரல்...