19 2
இலங்கைசெய்திகள்

முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் குறித்து வெளியிடப்பட்ட கண்டனம்

Share

முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் குறித்து வெளியிடப்பட்ட கண்டனம்

இலங்கையில் அமைப்பு ரீதியான சார்பு மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்குகள் குறித்து அனைவருக்கும் நீதி அமைப்பு, தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

காதுகளை மூடிய நிலையில், பரீட்சை எழுதினர் என்ற முறைப்பாட்டின் கீழ், திருகோணமலை நகரிலுள்ள சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்தக் கொள்கை, மத அடக்கத்தை பின்பற்றி ஹிஜாப் அணிய விரும்பும் முஸ்லிம் சிறுமிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது என்று அனைவருக்கும் நீதி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த கொள்கையானது முஸ்லிம் பெண்களை பாதிக்கிறது. இது இலங்கையில் முஸ்லிம் குடிமக்களுக்கு எதிரான மத பாகுபாட்டின் சூழலை நிலைநிறுத்துகிறது என்றும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற பொது நிறுவனங்களில் மாணவர்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கோருவதாக அனைவருக்கும் நீதி அமைப்பின் தலைவர் இமாம் அப்துல் மாலிக் முஜாஹித் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...