19 2
இலங்கைசெய்திகள்

முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் குறித்து வெளியிடப்பட்ட கண்டனம்

Share

முஸ்லிம்களுக்கு எதிரான போக்குகள் குறித்து வெளியிடப்பட்ட கண்டனம்

இலங்கையில் அமைப்பு ரீதியான சார்பு மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்குகள் குறித்து அனைவருக்கும் நீதி அமைப்பு, தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

காதுகளை மூடிய நிலையில், பரீட்சை எழுதினர் என்ற முறைப்பாட்டின் கீழ், திருகோணமலை நகரிலுள்ள சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 70 முஸ்லிம் மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்தக் கொள்கை, மத அடக்கத்தை பின்பற்றி ஹிஜாப் அணிய விரும்பும் முஸ்லிம் சிறுமிகளுக்கு எதிராக பாகுபாடு காட்டுகிறது என்று அனைவருக்கும் நீதி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த கொள்கையானது முஸ்லிம் பெண்களை பாதிக்கிறது. இது இலங்கையில் முஸ்லிம் குடிமக்களுக்கு எதிரான மத பாகுபாட்டின் சூழலை நிலைநிறுத்துகிறது என்றும் குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து போன்ற பொது நிறுவனங்களில் மாணவர்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கோருவதாக அனைவருக்கும் நீதி அமைப்பின் தலைவர் இமாம் அப்துல் மாலிக் முஜாஹித் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...