10 32
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு

Share

மின் கட்டண திருத்தம் குறித்து இறுதி முடிவு

மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது மின் கட்டணத்தை குறைப்பதா அல்லது தற்போது நடைமுறையிலுள்ள கட்டண முறையை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட உள்ளது.

குறித்த விடயம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission of Sri Lanka (PUCSL) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025 ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதிக்கு தற்போது நடைமுறையிலுள்ள மின் கட்டண நடைமுறையை அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளது.

இந்த யோசனை தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் மக்கள் கருத்துக் கணிப்புகளை முன்னெடுக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

அந்தக் கருத்துக் கணிப்புகள் கடந்த 10 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இதன்போது மின் கட்டணத்தை 20 – 30 சதவீதத்தால் குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை

இந்த கருத்துக் கணிப்பில், மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்த யோசனை மற்றும் அதுதொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஊழியர்களினால் மேற்கொள்ளப் பட்ட மதிப்பாய்வின் பின்னர் தயாரிக்கப்பட்ட யோசனை வரைவு தொடர்பில் பொதுமக்கள் உள்ளிட்ட தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கமைய, மின் கட்டணத்தை குறைப்பதா அல்லது தற்போது நடைமுறையிலுள்ள கட்டண முறையை அவ்வாறே நடைமுறைப்படுத்துவதா என்பது தொடர்பான தீர்மானத்தை நாளை மறுதினம் அறிவிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...