25 68484587d6a77
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான தகவல்

Share

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் முடிவு எடுக்கப்படும் என்று, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத் இதனை அறிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய செயல்முறை போன்ற தீர்க்கப்படாத சட்ட மற்றும் தொழில்நுட்பசிக்கல்களே, இதற்கான காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சவால்கள் போதுமான அளவு தீர்க்கப்பட்டு உள்ளூராட்சி சட்ட கட்டமைப்பு உறுதிப்படுத்தப்படும் வரை தேர்தல்கள் நடத்தப்படாது என்று பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பித்து பின்னர் அதை நிராகரித்திருந்தார்.

இதன் விளைவாக, அரசாங்கம் இப்போது பழைய தேர்தல் முறைக்குத் திரும்புவதையும் மாகாண சபைகளை எல்லை நிர்ணயம் செய்வதையும் பரிசீலித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...