rtjy 195 scaled
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தமிழரின் போராட்டம்!! ஐ.நா சபையிலிருந்து பின்வழியால் வெளியேறிய ரணில்

Share

புலம்பெயர் தமிழரின் போராட்டம்!! ஐ.நா சபையிலிருந்து பின்வழியால் வெளியேறிய ரணில்

நியூயோர்க்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் காரணமாக ஐ.நா சபையை விட்டு ரணில் பின்வழியால் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்பதை எதிர்க்கும் விதமாக ஐ.நா முன்றலில் பெரும் திரளான தமிழ் மக்கள் தமிழீழத் தேசியக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டமானது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரனின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கு தலைமை தாங்கிய உருத்திரகுமாரன் கருத்து தெரிவிக்கையில்,

நிரந்தர அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும் கூறியது மட்டுமல்ல இலங்கையின் உண்மைக்கும், நீதிக்குமான ஆணைக்குழு தமிழர்களை ஏமாற்றுவதற்கான சதித்திட்டம் இது.

மேலும் பெளத்த மயமாக்கல் , சிங்களக் குடியேற்றம் ஆகியவற்றில் ஐ. நா தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போராட்டத்தின் போது, “தியாகி திலீபனின் ஊர்தியை சிங்கக் கொடி கொண்டு அடித்து நொருக்கிய சிங்கள பெளத்த இனவெறி அரசு வெளியேறு, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? ரணில் ஐ.நாவுக்கு வருவது ஐ.நாவுக்கு அவமானம், இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து” போன்ற கோசங்கள் மக்களால் எழுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...