images 2
இலங்கைசெய்திகள்

இயக்கச்சியில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக போராட்டம்

Share

இயக்கச்சி பகுதியில் நேற்று (01) நடைபெற்ற இளைஞர் கழக நிர்வாக தெரிவின் போது தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள், ஆதரவாளர்களால் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இளைஞர் கழக நிர்வாக தெரிவிற்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எரங்க குணசேகர வரவிருந்த நிலையில் இயக்கச்சி மக்கள், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள், ஆதரவாளர்களால் கிராம சேவகர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

நடைபெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற இயக்கச்சி பகுதி வேட்பாளர்களில் ஒருவருக்கு போனஷ் ஆசனத்தை பகிர்ந்தளிக்காமல் குறைந்த வாக்குகளை பெற்ற நபர்களுக்கு ஆசனத்தை பகிர்ந்தளித்ததாக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

தேசிய மக்கள் சக்தியை நம்பி வாக்களித்திருந்த போதும் தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகிகள் ஜனநாயக கொள்கைகளுக்கும் ஜனாதிபதியின் சித்தாந்தங்களுக்கும் எதிராக செயற்படுவதாகவும் ஊழல்வாதிகளை கட்சியில் இருந்து வெளியேற்றி இன பேதமின்றி எமக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர்.

கலந்துரையாடலிற்கு சமூகம் தரவிருந்த இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறித்த போராட்டம் காரணமாக கலந்துரையாடலுக்கு சமூகம் தராமல் இடையில் திரும்பிச் சென்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேசிய மக்கள் சக்தி என்பது மக்களுக்காகவே தவிர, மக்களை சுரண்டுவதற்காக அல்ல, எங்கள் சனாதிபதிக்கு தேசிய மக்கள் சக்திக்குள் இருந்து கொண்டே துரோகம் செய்யாதே, ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக இன்னொரு ஊழல் பெருச்சாளி வேண்டாம், போன்ற பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...