17 18
இலங்கைசெய்திகள்

முப்படைகளை சேர்ந்த 12 ஆயிரம் பேருக்கு பதவியுயர்வுகள்..!

Share

இலங்கையின் முப்படைகளிலும் பணியாற்றும், 12,434 பேருக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்துக்கு, ஒரு சக்திவாய்ந்த கௌரவத்தை வழங்கும் வகையில், இந்த பதவியுயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

16ஆவது தேசிய போர்வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஒப்புதலுடன், இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி இலங்கை இராணுவத்தின் 186 அதிகாரிகள் மற்றும் 10,093 ஏனைய வீரர்கள், இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1256 வீரர்களுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன

அதேநேரம் விமானப்படையில் 9 அதிகாரிகளுக்கும் 868 வீரர்களுக்கும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...