17 18
இலங்கைசெய்திகள்

முப்படைகளை சேர்ந்த 12 ஆயிரம் பேருக்கு பதவியுயர்வுகள்..!

Share

இலங்கையின் முப்படைகளிலும் பணியாற்றும், 12,434 பேருக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஆயுதப் படைகளின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்துக்கு, ஒரு சக்திவாய்ந்த கௌரவத்தை வழங்கும் வகையில், இந்த பதவியுயர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

16ஆவது தேசிய போர்வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி என்ற அடிப்படையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஒப்புதலுடன், இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி இலங்கை இராணுவத்தின் 186 அதிகாரிகள் மற்றும் 10,093 ஏனைய வீரர்கள், இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1256 வீரர்களுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன

அதேநேரம் விமானப்படையில் 9 அதிகாரிகளுக்கும் 868 வீரர்களுக்கும் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...